நான் செய்தது தற்கொலை முயற்சி அல்ல என மதுமிதா பிக் பாஸில் நடந்த விசயங்களை பேசியுள்ளார்.
Madhumitha About BB Issue : தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
அங்கு நடந்த பிரச்சனைகளால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவரை வெளியேற்றினர். மதுமிதா ஏன் தற்கொலை முயற்சி செய்தார்? உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத விசயமாகவே இருந்து வருகிறது.
ராதிகா எனக்கு அம்மா கிடையாது.. நான் இப்படி தான் கூப்பிடுவேன் – வரலட்சுமி சரத்குமார் பளீர் பேச்சு.!
இந்நிலையில் மது இது குறித்து விருது விழா ஒன்றில் பேசியுள்ளார். நான் செய்தது தற்கொலை முயற்சியே இல்ல. தற்கொலை செய்து கொள்ள ஆயிரம் வழி இருக்கு.
வாழ்க்கையில் நெருக்கடி ஒன்று வரும் போது அதை திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
என்னால் அங்கு திருப்பி அடிக்க முடியவில்லை, அதனால் அந்த இடத்தில் இருந்து வெளியேறவே இப்படி செய்தேன் என பேசியுள்ளார்.
மேலும் இது முட்டாள் தனமான விசியம் தான், இது போல யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் பேசியுள்ளார்.