Maanaadu
சிம்புவின் அம்மாவால் மாநாடு திரைப்படத்தின் பஞ்சாயத்து முடிவடைந்து படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.

இவரது நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்க இருந்த இந்த திரைப்படம் இன்று ஷூட்டிங் தொடங்கும், நாளை தொடங்கும் என தள்ளி போய் கொண்டே ட்ராப்பானது.

சிம்புவிற்கு சுரேஷ் காமாட்சி முன் பணமாக ரூ 2 கோடி கொடுத்திருப்பதாகவும் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட இந்த பஞ்சாயத்தில் சிம்புவின் அம்மா கலந்து கொண்டு நீண்ட இழுபறிக்கு பிறகு பிரச்னையை முடித்து வைத்துள்ளார்.

அதாவது, சிம்பு படப்பிடிப்பில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூட்டிங்கில் கலந்து கொள்வார், அதற்கு நான் பொறுப்பு என கூறியுள்ளார்.

இதனையடுத்து மாநாடு திரைப்படத்தை மீண்டும் தொடங்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு கூடுமா? கூடாதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.