பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியா இலங்கையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
கவினுடனான காதலால் விமர்சனங்களுக்கு ஆளானாலும் ரசிகர்கள் மத்தியில் லாஸ்லியாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இலங்கை சென்ற இவருக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு அளித்த பேட்டியில் பிக் பாஸ் டீமிற்கு நன்றி.
சாதாரண பெண்ணான எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது, எனக்கு இருக்கும் கடமைகளை நான் உணர்கிறேன் என கூறியுள்ளார்.