பீட்டர் பாலுக்கு வக்காலத்து வாங்கிய வாய் கிழிய பேசிய வனிதா இன்று அவரை பிரிந்து விட்ட நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Laxmi Ramakrishnan About Vanitha : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நாயகனாக நடித்த சந்திரலேகா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார் வனிதா விஜயகுமார்.
யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போதே பீட்டர் பால் நல்லவர் அல்ல அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அவருடைய முதல் மனைவி கூறியும் பீட்டர் பால் தான் உத்தமர் என கூறினார்.
அப்போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்துக்கு ஆதரவாக பேசிய லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.
இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மன உளைச்சலுக்கு ஆளாகி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக வனிதாவைத் தாக்கி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் I blocked a handle now, because I learnt my lesson 3 months back ; பெரியார் கூறியதாவது : “மானம் உள்ள ஆயிரம் பேரை, எதிர்த்து நின்று சண்டையிடலாம். மானம் இல்லாத ஒருத்தருடன் சண்டையிட்டால் நம் மானம் போய்விடும்” என தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் வனிதாவிடம் ஏற்பட்ட சண்டை குறித்து தான் இவ்வாறு தெரிவித்துள்ளார் என கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.