தமிழ் சின்னத்திரை சீரியலில் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest Update About Serial Shooting : இந்தியாவில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் சீரியல்கள் போன்ற ஷூட்டிங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சேனல்களிலும் சீரியல்களின் பழைய எபிசோடுகளே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் சின்னத்திரை கூட்டங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
இதனால் வெகு விரைவில் சின்னத்திரை சீரியல்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சின்னத்திரை சீரியல்களின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் சீரியல் சூட்டிங்களும் தடைப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.