Kv Anand Story to Suriya

சூர்யாவுக்காக மீண்டும் ஹாலிவுட் ரேப் கதை ஒன்றை எழுதி வைத்துள்ளார் கே வி ஆனந்த்.

Kv Anand Story to Suriya : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகும் ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் கே வி ஆனந்த். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடந்த வாரம் உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும் நடிகர் சிம்பு உங்களது இயக்கத்தில் கோ படத்தில் நடிக்க இருந்தேன். சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

தினமும் பேசிக்கொண்டிருந்தோம் புதிய கதை ஒன்றில் கூறியிருந்தீர்கள் விரைவில் இணைந்து பணியாற்ற இருந்த நிலையில் இப்படி சென்று விட்டீர்கள் என கூறியிருந்தார். சிம்புவுக்கு மட்டுமல்லாமல் சூர்யாவிற்கும் ஒரு தரமான கதையை எழுதி வைத்துள்ளார் கே வி ஆனந்த்.

ஹாலிவுட் தரத்தில் ஒரு கதையை எழுதி வைத்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் கடைசியில இப்படி படத்தை இயக்காமலே போயிட்டீங்களே என வருத்தப்பட்டு வருகின்றனர்.