பயமா இருந்தா விஜய் சிம்பு படத்தை பார்க்க தியேட்டருக்கு வராதீங்க என குஷ்பு பதிவிட்டுள்ளார்.
Kushbu Thanks to TamilNadu Government : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் என்பது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்த நிலையில் உங்கள் முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதேசமயம் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் கொரானா மீண்டும் அதி தீவிரமாக பரவும் என இந்த அறிவிப்புககு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கொரானா பரவும்னு பயம் இருந்தால் யாரும் திரையரங்கிற்கு வராதீர்கள். தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள் என யாரும் உங்களை வற்புறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.