சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து குஷ்பு பதிவிட்டுள்ளார்.
Kushbu About Chithra Suicide: தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் பூந்தமல்லி அருகே உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது குஷ்பு இவருடைய மறைவு குறித்து பதிவிட்டுள்ளார்.
அவர் எதையோ அணுக விரும்பியிருக்கிறார், அது பறிக்கப்படவே இப்படியான முடிவை எடுத்து இருக்கலாம். எனக்கு தனிப்பட்ட முறையில் சித்ராவை தெரியாது. ஆனால் அவருடைய வலியை புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளார்.
அவரை இந்த நிலைமைக்கு தள்ளியது எது என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.