பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து கதிர் விலகியதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
Kumaran Releave From Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கதிர் என்ற கதாபாத்திரத்தில் குமரன் நடித்து வருகிறார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவிய அறிவுமணி நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக குமரன் சீரியலில் இடம்பெறவில்லை வெளியூர் சென்று இருப்பது போல காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன.
இதனால் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகிவிட்டதாக பட வாய்ப்புகள் வந்ததால் அவர் இப்படியான முடிவை எடுத்ததாகவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டள்ளார்.
அந்த பதிவில் நீங்கள் இந்த ஷோவை ரசித்து பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு ரசிகனாக ரசித்து பார்த்தேன். மேலும் இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்த்தது தான் இதில் எதையும் சேர்க்கவும் இல்லை நீக்கவும் இல்லை. ஜெயிக்கிறோம் அல்லது ஜெயிக்காமல் போகிறோம் அது முக்கியமில்லை . உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இவருடைய இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். நீங்கள் சீரியலில் இருக்கிறீர்களா இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.