KP Anbazhagan Clarification
KP Anbazhagan Clarification

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

KP Anbazhagan Clarification : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பை சந்தித்து வருகிறது.

தமிழகத்திலே இந்த வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. தமிழில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்திருந்தார். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த எம்எல்ஏ பழனி என்பவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால்? – அமைச்சர் சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

இவர்களைத் தொடர்ந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.

இதனையடுத்து அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனக்கு சாதாரண காய்ச்சல் இருந்தது மருத்துவமனைக்கு சென்றேன் தற்போது சரியாகி விட்டது .

எனக்கு கரோனா பாதிப்பும் இல்லை நான் தனிப்படுத்தப்படவும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.