Kolaiyuthir Kaalam Press Release
Kolaiyuthir Kaalam Press Release

Kolaiyuthir Kaalam Press Release – ராதாரவி, நயன்தாரா விவகாரம்தான் கடந்த வாரம் தமிழகத்தின் ஹாட் டாபிக்.

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து தரக்குறைவாக பேசியதற்காக விக்னேஷ் சிவன், ராதாரவியை டிவிட்டரில் கடுமையாக வசைப்பாடினார்.

மேலும் இதுவொரு முடிவுறாத படம் இதற்கு எதற்கு தற்போது விளம்பரம் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தயாரிப்பு தரப்புக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதாவது விக்னேஷ் சிவன் இப்படி பேசியதால் இப்படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லையாம். மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கவிருந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டார்களாம்.

இதனால் தனக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர போகிறார் என்றும் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது கொலையுதிர் காலம் படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எந்த படம் நின்று போனதாக விக்னேஷ் சிவன் சொன்னாரோ அந்த படம் மே இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி காதலரும் தயாரிப்பாளரும் மோதிக் கொண்டதில் நயன்தாரா தற்போது யார் பக்கம் என்பதுதான் திரையுலகின் கேள்வியாக உள்ளது.