நடிகை கியாரா அத்வானி இப்படத்தை லாரன்ஸ் மட்டும்தான் சிறப்பாக இயக்க முடியும் என கூறியுள்ளார்.
Kiara Advani About Raghava Lawrence :
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.
பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
ரசிகருடன் கவர்ச்சியான உடையில் செல்பி, வைரலாகும் ப்ரியா ஆனந்தின் புகைப்படம்.!
அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தற்போது மீண்டும் அப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகை கியாரா அத்வானி இப்படத்தை லாரன்ஸ் மட்டும்தான் சிறப்பாக இயக்க முடியும் என கூறியுள்ளார்.