Kerala Bandh: TN govt buses stoped
Kerala Bandh: TN govt buses stoped

Kerala Bandh: TN govt buses stoped – கேரளா: அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்பினரமற்றும் சபரிமலை பக்தர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,’கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக இன்று பந்த் அறிவித்துள்ளது’.

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் தொடர்பான வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இதன் காரணமாக, சபரிமலை பகுதியில் மற்றும் சபரிமலைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், சபரிமலையில் சமீபத்தில் பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.இதனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், “பாஜக மீது தடியடி நடத்தியதை எதிர்த்து, திருவனந்தபுரத்தில் பாஜக இன்று பந்த் அறிவித்துள்ளது.

சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எனவே பந்த் காரணமாக, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன”.