கிண்டல் அடிப்பவர்களுக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Keerthy Suresh Reply to Haters : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மகாநதி படத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார்.
திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அப்படி இருந்தும் ஒரு கூட்டம் தொடர்ந்து கீர்த்தி சுரேசை கிண்டல் அடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கீர்த்தி சுரேஷுடன் பேட்டி ஒன்றில் கேட்ட போது தன்னை கிண்டல் அடிப்பவர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.
மாநாடு ஒரு போதும் நிற்காது – சுரேஷ் காமாட்சி அதிரடி..!
அதாவது என்னை கிண்டல் அடிப்பார்களை முதலில் நானும் பார்த்தேன். இதனை சிரித்துக்கொண்டே கடந்து விடுவேன். ஒரு கட்டத்திற்கு பிறகு என்னை மீண்டும் டார்கெட் செய்கிறார்கள் என புரிந்து கொண்டேன்.
இருப்பினும் இதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வேலையை செய்ய முடியாது. என்னுடைய வேலை படங்களில் நடிப்பது அதை மட்டும் நான் செய்து கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த பதிலடியை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.