Keerthy Pandiyan : வாய்ப்பு தேடிய தனக்கு இயக்குநர்களால் நேர்ந்த விபரீதங்கள் குறித்து அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980 டு 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன்.
இவர் தற்போது பிரபல தயாரிப்பாளராகவும் படத்தை வாங்கி வெளியிடும் தொழிலிலும் படு பிஸியாக இருந்து வருகிறார்.
விஜய் கொடுத்த அட்வைஸ் தான் ஹீரோவாக காரணம் – நெகிழும் பிரபல நடிகர்
இதுவரை இவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் பிசினஸில் ஈடுபட்டு வந்தார். அதன் பின் நடிப்பில் ஆர்வம் ஏற்படவே தான் அருண் பாண்டியன் மகள் என கூறாமல் வாய்ப்பு தேட தொடங்கியுள்ளார்.
பல இயக்குனர்கள் தன்னை ரிகர்சல் கூட செய்து காட்ட சொல்லாமல் நிராகரித்து விட்டனர். சில இயக்குனர்களிடம் இருந்து விபரீதமான அனுபவங்களும் கிடைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் இவர் தற்போது குழந்தைகளுக்கான கதையை கொண்ட படம் ஒன்றில் நடித்துள்ளார். பெயரிப்படாத அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.