கவின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Kavin Post After Bigg Boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒரு வழியாக கடந்த ஞாயிற்று கிழமையோடு முடிவிற்கு வந்து விட்டது. பிக் பாஸ் டைட்டில் வின்னராக முகேன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு, வெறுப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்றவர் கவின். சாக்ஷி அகர்வால், லாஸ்லியா என முக்கோண காதல் செய்து சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர்.
ஏன் இவ்வளவு ஒல்லி? ராணாவுக்கு என்ன ஆனது தெரியுமா? – வெளியான தகவல்.!
தற்போது கவின் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உங்களின் அன்பை நான் ஏற்று கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நான் உங்களை எதாவது ஒரு விதத்தில் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னித்து விடுங்கள் எனவும் கூறியுள்ளார்.
இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இதில் நான் என் உணர்வுகளின் படி தான் நடந்தேன், உண்மையாக இருந்தேன். என்னுடைய எமோஷன்கள் அனைத்தும் உண்மை என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நான் நிச்சயம் நல்ல வழியில் வாழ்ந்து என்னை வெறுப்பவர்கள் எண்ணிக்கையை குறைப்பேன் என கூறியுள்ளார்.
View this post on Instagram