பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேறியது போல கவினும் வெளியேறி விட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kavin Exit From BB : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவர் கவின்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே விளையாட்டு என கூறி அபிராமி, சாக்ஷி அகர்வால், ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகியோரின் பின்னாடி திரிந்து கொண்டிருந்தார்.
மாடர்ன் உடையில் ப்ரியமானவள் உமா – வைரலாகும் இளமை பருவ புகைப்படம்.!
நாளடைவில் ஷெரீனையும் அபிராமியையும் விட்டு விட்டு சாக்ஷி அகர்வாலை காதலிப்பதாக கூறி இருவரும் மாறி மாறி ப்ரொபோஸ் செய்து கொண்டனர்.
ஆனால் இதுவும் விளையாட்டு தான் என கூறி முடித்து விட்டு தற்போது லாஸ்லியாவை காதலித்து வருகிறார்.
இவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவினின் தாயார் கைது செய்யப்பட்டு இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த கொடுமைகள்.. போலீசில் புகார் அளித்த மதுமிதா – கமலுக்கும் ஆப்பா?
இதுவரை இந்த விசியம் கவினுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி இந்த விசயத்தை போட்டுடைக்க இதனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அதுவும் சரவணனின் கண்ணை கட்டி வெளியேற்றியது போல கவினையும் வெளியேற்றியது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இதோ அந்த புகைப்படம்