பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி மதுமிதா விவகாரம் குறித்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
Kasthuri Shocking Interview About Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இரு வாரங்களுக்கு முன்பு வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றாவது கஸ்தூரி.
சென்ற வேகத்திலேயே வெளியேற்றவும் பட்டார். இவருக்கு சீக்ரெட் ரூமிற்கு செல்லும் வாய்ப்பை கொடுத்ததும் அதனை கஸ்தூரி நிராகரித்து விட்டார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல அதிர்ச்சிகர உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.
அதாவது மதுமிதாவுக்கு நடந்தது என்ன என்பது பற்றி கேட்டதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் சேரனுக்கு மட்டும் தான் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. மற்றவர்கள் யாருக்கும் இல்லை என கூறியுள்ளர்.
மதுமிதாவிற்கு நடந்தது எனக்கு மிகவும் வேதனையை கொடுத்தது, நானும் நிறைய விசயங்களை பேசினேன். அதையெல்லாம் வெளியில் காட்டவில்லை என கூறியுள்ளார்.
மதுவிற்கு நடந்த பிரச்னையை அடுத்து அன்று இரவு தான் எனக்கு பிக் பாஸின் உண்மை முகம் தெரிய வந்தது என கூறியுள்ளார்.
மேலும் நானும் காவிரி பிரச்சனை பற்றி பேசினேன் அதையும் வெளியே காட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.