ராகவா லாரன்ஸ் கொடுத்த நிதி குறித்து பாராட்டியுள்ளார் கஸ்தூரி
Kasthuri Praises Raghava Lawrence : கொரானா வைரஸ் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவும் முடங்கிப் போயுள்ளது. மத்திய மாநில அரசுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
திரையுலக பிரபலங்களும் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களால் இயன்ற நிதி அளித்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராகவா லாரன்ஸ் மத்திய அரசுக்கு 50 லட்சமும் மாநில அரசுக்கு 50 லட்சமும் பெப்சி அமைப்புக்கு ஐம்பது லட்சமும் நடன இயக்குனர்கள் சங்கத்துக்கு ஐம்பது லட்சமும் அளித்திருந்தார்.
விஸ்வாசம் ஸ்பெஷலுடன் சூப்பர் ஸ்டாருடன் லாரன்ஸ் கூட்டணி – வெளியானது சூப்பர் புகைப்படம்.!
அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்காக ரூபாய் 25 லட்சமும் பிறந்த ஊரான இராயபுரம் பகுதி ஏழை எளிய மக்களுக்காக 75 லட்சமும் கொடுத்திருந்தார்.
மொத்தமாக 3 கோடி கொடுத்த ராகவா லாரன்சை நடிகை கஸ்தூரி பாராட்டி டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை.
நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை.
நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான் .Whopping 3CR pledged by @offl_Lawrence Raghava Lawrence. Too overwhelmed for words. 🙏🙏🙏 pic.twitter.com/gZTdgKSnfH
— Kasturi (@KasthuriShankar) April 9, 2020