தடைகளை தாண்டி திட்டமிட்டபடி கருத்துகளை பதிவு செய் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நல்ல கருத்துகளை சொல்லும் படங்கள் உருவாவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்களே நல்ல கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துகின்றன.
அந்த வரிசையில் இயக்குனர் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருத்துகளை பதிவு செய். நாளை முதல் இப்படம் திரைக்கு வர இருந்த நிலையில் இந்த படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கம் விசாரித்த நீதிபதி கருத்துக்களை பதிவு செய் திரைப்படம் நாளை வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.வழக்கில் உண்மை தன்மை இல்லாமல் எந்த முகாந்திரமும் இல்லாமல் படத்திற்க்கு தடை விதிக்க முடியாது என மாண்புமிகு நீதிபதி அவர்கள் இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து விட்டார் என இயக்குனர் ராகுல் கூறியுள்ளார்.
இதனால் கருத்துக்களை பதிவு செய் திரைப்படம் நாளை உறுதியாக வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.