Karunas Interview About Suriya

இன்னமும் சூர்யாவை மாமா மச்சான் என்று தான் கூப்பிடுவேன் என பிரபல நடிகர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Karunas Interview About Suriya : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார்.

அபர்ணா பாலமுரளியின் சித்தப்பாவாக எம்எல்ஏ-வும் நடிகருமான கருணாஸ் நடித்திருப்பார். இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

என்னுடைய முதல் படம் சூர்யா உடன் தான். நந்தா படத்தில் சூர்யாவை பார்த்தது போலவே இந்த படத்திலும் இருக்கிறார். இதுவரை நான் எந்த படத்திற்காகவும் இந்த அளவிற்கு ஹோம் வொர்க் செய்ததில்லை. சுதா கொங்கரா மேடம் கிரேட், ஆண் இயக்குனர்களுக்கு நிகராக வருவாங்க.

சூர்யா இயக்குனர்கள் செல்வதை மதித்து நடப்பவர். இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அதிகம் ஹோம் வொர்க் செய்துள்ளார். இதற்காகத்தானே கஷ்டப்படுகிறோம் என கூறுவார்.

இன்னமும் நான் சூர்யாவை மாமா, மச்சான் தான் கூப்பிடுவேன். சூர்யாவைப் பார்த்து கத்துக்கோ என என் மகனிடம் கூறுவேன் அந்த அளவிற்கு சிறந்த உழைப்பாளி. தன்னைத் தானே வளர்த்து கொண்டவர்‌ என பேசியுள்ளார்.