Karunanidhi Death Anniversary :
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நம்பி மோசம் போன சிம்பு.. இவ்வளவு சர்ச்சைக்கும் இந்த இருவர் தான் காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!
அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து கலைஞர் நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
மேலும் துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, உதயநிதி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் இன்று கலைஞரின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். திமுகவை சேர்ந்த ஏராளமானோர் அலை அலையாக சென்று கலைஞருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.