திருவண்ணாலை: திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலை மலை மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் வரும் நவம்பர் 23- ஆம் தேதி வர உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.