தன்னுடைய வீட்டின் மின்சார கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் வந்திருப்பதாக புகார் அளித்துள்ளார் நடிகை கார்த்திகா நாயர்.
Karthika Nair Complaint on EB : தமிழ் சினிமாவில் கோ என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கார்த்திகா.
பிரபல நடிகை ராதாவின் மகளான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் தற்போது சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.
தற்போது மும்பையில் வசித்து வரும் கார்த்திகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மின்சார வாரியத்தின் மீது புகார் அளித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது கடந்த மாதம் தன்னுடைய வீட்டில் தானே மின்சார கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் வந்திருப்பதாக கூறி உள்ளார். மேலும் ரீடிங் எதுவும் எடுக்கவில்லை.
அப்படி இருக்கும் போது ஏதோ ஒரு கணக்கில் எப்படி ஒரு லட்சம் பில்லென கூற முடியும் என அவர் புகார் அளித்துள்ளார். நான் மட்டுமல்ல நிறைய மும்பை காரர்கள் இதே புகாரை கூறுவதாகவும் கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.