college

தேர்வில் காப்பி அடிப்பதை தவிர்க்க கல்லுரி மாணவர்களின் தலையில் அட்டை பெட்டிகள் கவிழ்க்கப்பட்ட சம்பம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கர்நாடகா ஹவேரி பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் காப்பி அடித்து எழுதியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் திருந்தவில்லை. எனவே, இதை எப்படி தடுப்பது என யோசித்த கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுதும் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை கவிழ்ப்பது என்ற நூதன யோசனைக்கு வந்து அதனை செயல்படுத்தி விட்டது.

இந்த புகைப்படங்கள் வெளியாக தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.