கரீனா கபூரின் குழந்தையை பார்த்து கொள்ளும் பெண்மணியின் மாத சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
இருவருமே படங்களில் பிசியாக நடித்து வருவதால் தங்களுடைய குழந்தையை பார்த்து கொள்ள பெண்மணி ஒருவரை நியமித்து உள்ளனர்.
அந்த பெண்மணிக்கு இதற்காக மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டு வருவதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலானது.
இது குறித்து கரீனாவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு இதற்கு நான் மறுப்பும் கூறப்போவதில்லை. இதை பற்றி பேசப்போவதும் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் இது உண்மை தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
View this post on Instagram