கரகாட்டக்காரன் படத்தில் காமெடி ஒன்றில் அடிபடும் சொப்பணசுந்தரி யார் என்பது தற்போது தெரிய வர உள்ளது.
Karakattakaran Soppana Sundari : தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜ், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையும் காமெடியும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கங்கை அமரன்.
ஆனால் ஒரு முறை கரகத்தை தூக்கிட்டேன்.. இறக்கியும் வச்சிட்டேன்.. இனியும் கை வைப்பது தேன் கூட்டில் வைப்பதற்கு சமம் என கூறி ராமராஜ் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
பல மொழிகளில் தோல்வியை தழுவிய படத்தின் ரீமேக்காக கடாரம் கொண்டான்? – ஷாக்கிங் அப்டேட்.!
கவுண்டமணியும் உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதால் அவரும் நடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. செந்தில், கோவை சரளா நிச்சயம் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
கரகாட்டக்காரனில் இடம் பெற்றிருந்த கார் காமெடி ஒன்றில் அடிபடும் பேர் தான் சொப்பன சுந்தரி.
முதல் பாகத்தில் யார் அந்த சொப்பன சுந்தரி என்பதையே காட்டதாக கங்கை அமரன் அந்த ரகசியத்தை இரண்டாம் பாகத்தில் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அறிந்த அனைவரின் மனநிலையில் சொல்வது தான்… அன்றைய காலகட்டத்திற்கு இப்படம் ரசிக்கப்பட்டது. இன்றைய காலக்கட்ட மக்கள் இதனை ஏற்று கொள்வார்களா? என்பது தான் மிக பெரிய சந்தேகம்.