Kanimozhi vs Tamilisai :

தூத்துக்குடி: தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை சவுந்திரராஜன் பேசினால் பரவாயில்லை என கனிமொழி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்,

அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், “வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை என்னால் ஏற்க முடியாது..!

மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்.. முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு.!

குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அதிமுக தோல்வி என கூறுவதை என்னால் ஏற்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூத்துக்குடியில் எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது,

‘தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார் கனிமொழி.

இவ்வாறு திமுகவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவது ஒருபுறம் இருந்தாலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற களிப்பை திமுகவினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.