கலக்க போவது யாரு நிகழ்ச்சி முலமாக பிரபலமான சிங்கப்பூர் தீபனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிங்கப்பூர் தீபன் என பட்ட பெயர் பெற்றவர் தீபன்.
இவருக்கு திருமணமாகி இவருடைய மனைவி கர்ப்பமாகி இருந்தார். மேலும் மருத்துவர்கள் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் என ஏற்கனவே கூறியிருந்தனர்.
இதனால் தீபனும் அவரது மனைவியும் பிறக்க போவது ஒரு ஆண், ஒரு பெண் என கூறி அவர்களுக்கு உடைகளையும் எடுத்து வைத்திருந்தனர்.
இவர்களின் ஆசைப்படியே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் பிறந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.