வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான கடத்தல்காரன் திரைப்படம் 4ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kadathal Kaaran From December4 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு திரைப்படங்களை உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே வித்யாசமான கதைக் களத்தோடு உருவாகின்றன.
அப்படி முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் தான் கடத்தல்காரன்.
எப் 3 பிலிம்ஸ் சார்பில் பிரயா, பெனி, பெலிக்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடத்தல்காரன். எஸ்.குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் கெவின் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரேணு செளந்தர் அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் கூறியதாவது, கடத்தலை குலத் தொழிலாகக் கொண்ட ஒரு கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எந்த பொருளை திருடினாலும் மக்கள் அதனை சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.
திருமண வீட்டில் நகைகளை திருடும் போது மணப்பெண்ணை சேர்த்து கடத்தி விடுகிறார்கள். நகைகளை சரி சமமாக பங்கிட்டுக் கொண்ட இவர்கள் மணப்பெண்ணை எப்படி பங்கிடுவது என யோசிக்கின்றனர்.
இப்படியான நிலையில் மணப் பெண்ணின் காதலன் இந்த கூட்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
இப்படத்தை வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.