kadambur raju

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

ரசிகர்கள் அனைவருமே இந்த படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிகில் திரைப்படத்தை அதிகாலையே பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்குள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், திரையரங்கில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றால் சிறப்பு காட்சிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அதிகாலை காட்சிற்கு டிக்கெட் ஆயிரக்கணக்கில் வசூலித்து லாபம் பார்க்க நினைத்த தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.