K13 Movie Review : பரத் நீலகண்டன் இயக்கத்தில் SP சினிமாஸ் தயாரிப்பில் அருள் நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் K 13.
படத்தின் கதைக்களம் :
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் ( மலர்விழி ), அருள் நிதியும் ( மதியழகன் ) இருவரும் ஒரு பாரில் சந்தித்து கொள்கின்றனர். அதன் பின்னர் ஒரு வீட்டில் அருள்நிதி ஷேர் ஒன்றில் கட்டிப் போட்டு கிடக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் கையறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார்.
இவர்களுக்கு இடையே என்ன நடந்தது? ஷ்ரத்தா ஸ்ரீநாத் எப்படி இறந்தார்? அதன் பின்னர் இந்த வீட்டில் இருந்து அருள்நிதி எப்படி தப்பித்தார்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.
படத்தை பற்றிய அலசல் :
குவியும் படங்களால் சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு – ஓர் நாளைக்கே இத்தனை லட்சமா?
நடிகர் நடிகைகளின் நடிப்பு :
அருள்நிதியின் நடிப்பு, ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பாக அமைந்துள்ளது. யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் வெறும் ஒரே சீனில் வந்து சென்று விடுவது ஒரு சிறிய மைனஸ்.
தொழிநுட்பம் :
இசை :
சாம் சி.எஸ் திரில்லர் படங்களின் நாடித்துடிப்பு அறிந்து பின்னணி இசையை அருமையாக கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு :
அரவிந் சிங்கின் ஒளிப்பதிவு பிரமாதம். ஒவ்வொரு காட்சியை மிக தெளிவாகவும் அழகாகவும் படமாக்கியுள்ளார்.
எடிட்டிங் :
ரூபனின் எடிட்டிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய பணியை செய்து கொடுத்துள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு
2. படத்தின் பின்னணி இசை
3. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
தம்ப்ஸ் டவுன் :
1. திரைக்கதையில் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருக்கலாம்.