சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றிய ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Jyothika‘s Interview About Suriya : தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொண்டாலும், மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் ஜோடி எப்பொழுதுமே சூர்யா-ஜோதிகா தான்.
அதனை உண்மையாக்கும் வகையில் அண்மையில் ஜோதிகா ஒரு பேட்டியில் கூறியதாவது
“நான் கார்த்தி பட சூட்டிங்காக 15 நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன், அந்த சமயத்தில் எனது குழந்தைகளைப் பற்றி நான் பெரிதும் கவலைப்பட்டேன். ஆனால் சூர்யா அந்த 15 நாட்களும், என்ன வேலை இருந்தாலும் 5 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதுடன், அவர்களை படத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி தந்துள்ளார்.
என்னை விட ஒரு படி மேலேயே அவர்களை கவனித்துக் கொண்டுள்ளார்.நான் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு காரணம், அவர் பெண்களிடம் கண்ணியத்துடனும் நடந்து கொள்வதே. அவருடன் நான் நடித்த 7 படங்களில் மூலம் அதனை தெரிந்து கொண்டேன்.
அதேபோன்று கணவனாக மட்டுமல்லாமல் தந்தையாகவும் அவருடைய பொறுப்புகளை வியக்கும் வண்ணம் செயல்படுத்துவார். இதுமட்டுமல்லாமல் எனக்கு வண்டி ஓட்டவும் அவர் சொல்லித் தந்ததால் தான், “மகளிர் மட்டும்” படத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கை என்னால் துணிச்சலுடன் ஓட்ட முடிந்தது” என்று பெருமிதத்துடன் பேட்டியளித்தார்.