வரும் 5 வருடங்களில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Job Opportunity in India : டெல்லியில் நடந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடுத்த ஐந்து வருடங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதியளித்தார்.
அது மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் பங்கு 30% உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தத் துறையின் மூலம் பதினோரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் எனவே இதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை அளித்தார்.
ஆனால் கிராமப்புறங்களில் இருந்து கிடைக்கும் பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது உரையில் தெரிவித்தார்.