Jayashree Ramaiah Commits Suicide

சித்ராவை தொடர்ந்து பிக்பாஸ் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayashree Ramaiah Commits Suicide : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு சேனல்களில் பணிபுரிந்து தற்போது ஓரளவிற்கு வளர்ந்து வந்தார்.

இப்படியான நிலைமையில் தான் கணவருடன் ஏற்பட்ட சண்டை, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரைத் தொடர்ந்து கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட ஜெய ஸ்ரீ ராமையா என்பவர் மனவுளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டிலிருந்து விலக்கி தனிமையில் வாழ்ந்து வந்த இவர் மன அழுத்தத்திற்காக சந்தியா கிரானா என்கிற ஆசிரமத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இப்படியான நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலை குறித்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்தபோது கிச்சா சுதீப் இவருக்கு ஆறுதல் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.