செம்பருத்தி சீரியல் நிலையைத் தான் மாற்ற வேண்டும் என ஜனனி அளித்துள்ள பேட்டியில் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Janani Ashok Kumar About Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஆகியோர் இந்த சீரியலில் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர்.
மேலும் நடிகை ஜனனி அசோக் குமார் என்பவரும் இந்த சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றில் கண்ணீருடன் இந்த தகவலை கூறினார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பரத நாயுடு கூறுவதுபோல செம்பருத்தி சீரியலில் அரசியல் எல்லாம் அவ்வளவு இல்லை. விரைவில் சீரியல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சீரியலில் இருந்து ஒருவரை மாற்ற வேண்டும் என கேட்டால் நான் நிச்சயம் ஆதியை தான் கூறுவேன்.
அவருக்கு சீரியலில் நடிக்க துளியும் விருப்பமில்லை. படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. அவரை படங்களில் நடிக்க அனுப்பிவிட்டு இந்த சீரியலில் நல்ல நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.