பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை ரூ 65 கோடி கைப்பற்றி இருப்பதாகவும் இதனால் விஜய்க்கு நெருக்கடி அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
IT Raid in Vijay Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்திருந்தது AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம்.
நேற்று முதல் இந்த நிறுவனத்திலும் இதன் உரிமையாளர் வீடுகள் உட்பட மொத்தம் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட தொடங்கினர்.
AGS நிறுவனத்தில் சோதனையிட்ட போதே தளபதி விஜய் மற்றும் அவரின் நீலாங்கரை, சாலிகிராம் மற்றும் பனையூர் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் கோபுரம் பைனான்சியர் அன்பு செழியன் வீட்டிலும் நடந்த ரைடில் இதுவரை ரூ 65 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய்க்கு நெருக்கடி அதிகமாகும், அவரின் வீட்டில் சோதனையை இன்னும் பலப்படுத்துவார்கள் என கூறப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் வருமான வரித்துறையினர் விஜயை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாரணை நடத்தும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தளபதி ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஒன்று திரண்டு #WeStandWithThalapathy என்ற ஹேஸ்டேக்கில் விஜய்க்கு தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
அன்பு செழியன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sources: Money recovered from the financer of Tamil actor Vijay during Income Tax Department raids. https://t.co/IBIl5mouYl pic.twitter.com/tbOIX76X3I
— ANI (@ANI) February 6, 2020