ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் படுமோசமாக விளையாடி வந்த சென்னையின் எப்.சி அணி, தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்தது.
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடியதால் தலா ஒரு கோல் போட்டனர்.
இதனையடுத்து ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி மீண்டும் ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் இரண்டு போட்டிகளை டிரா செய்துள்ள நிலையில் இன்று முதல் வெற்றி கிடைத்துள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.