International Hacking : உக்ரைனின் வர்த்தக உறவில் ஈடுபட்டு வந்த பல்வேறு நிறுவனங்களின் தகவல் சேமிப்புகளில் “நாட்வெட்டியா” தீசெயலி மூலம் உலக அளவில் கோடிக்கணக்கான வர்த்தக இழப்பு ஏற்படுத்திய செயலுக்காக ஜிஆர்யு மீது பொருளாதார தடையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.
இதைத்தவிர “ஆப்ரேஷன் கிளவுட் ஹாப்பர்” என்ற இணையதள ஊடுருவல் இல் தொடர்புடைய 2 சீனர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அந்த ஊடுருவல் காரணமாக உட்பட 6 கண்டங்களில் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
மேலும் “வானாகிரை” தீசெயலி மூலம் ஊடுருவிய குற்றத்துக்கு “சோஷன் எக்ஸ்போ” என்ற நிறுவனம் மீதும் வடகொரிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.
17 மாவட்டங்களில் ரூபாய் 247.90 கோடி செலவில் நடைபெறும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்
தடை செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் இனி ஐரோப்பிய யூனியன் நாட்டிற்கு வர முடியாது மேலும் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்படும், நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பணபரிமாற்றம் செய்ய முடியாது என்று ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார பிரிவு தலைவர் ஜோசப் பாரெல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.