இந்தியன் 2 திரைப்படம் எங்களது அனுமதி இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லைகா நிறுவனம்.
Indian 2 Shocking Update : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருவது லைகா நிறுவனம். இந்த நிறுவனத்தில் முக்கிய பதவி வகித்து வந்தவர் ஐங்கரன் இன்டர்நெஷனல் கருணாகரன்.
இவர் தான் படத்தின் கதையை கேட்பது, இயக்குனர்களை கமிட் செய்வது, சம்பளம் கொடுப்பது என அனைத்து பணிகளையும் கவனித்து வந்துள்ளார்.
அழகிய குரலில் பேசி மயக்கிய இளம்பெண் – நம்பி ஏமாந்த 46 வாலிபர்கள்
தற்போது இவர் மீது லைகா நிறுவனம் மோசடி புகார் ஒன்றை போலீசில் பதிவு செய்துள்ளது. அந்த பதிவில் கருணாகரன் நாங்கள் கொடுத்த அதிகாரங்களை பயன்படுத்தி பல கோடி ருபாய் மோசடி செய்திருப்பதாக கூறியுள்ளது.
அவர் செய்த மோசடி தொகையை கணக்கிடவே முடியவில்லை. எங்களுக்கு தெரிந்த கணக்கு வரை ரூ 130 கோடிக்கும் அதிகமாக கையாடல் செய்துள்ளார் என கூறியுள்ளது.
மேலும் எண்களின் அனுமதி இல்லாமலேயே சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை ஒப்பந்தம் செய்து ரூ 14 கோடி நஷ்டம் ஏற்படுத்தி விட்டார். அதே போல் இந்தியன் 2 படமும் எங்களின் அனுமதி இல்லாமல் ஒப்பந்தம் செய்துள்ளார்.
பாதியில் படப்பிடிப்பு நின்றதால் எங்களுக்கு ரூ 9 கோடி நஷ்டம் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.