India Vs WI :
நேற்று நடந்த 3-வது டி-20 போட்டியில் மே.தீ., எதிராக இந்தியா கடைசி பந்தில், 6 விக்கெட் வித்யாசதில் திர்லாக வெற்றி அடைந்தது கோப்பையை கைப்பற்றியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் தவான் மற்றும் ரிஷப் பந்த் ஆகிறோரின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.
முதலில் டாஸ் வென்ற மே.தீ., அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆட்டத்தை தொடாகியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களின் கடமையை சரியாக செய்து 6 ஓவர் முடிவில் 50 ரன்கள் எடுத்திருந்தனர். சாஹல் பந்து வீச்சில் இந்த இணை உடைந்தது. அதன் பிறகு ரன் ரேட் குறைக்கப்பட்டது.
பிராவோ மற்றும் நிக்கோலஸ் நன்கு விளையாடினர். நிக்கோலஸ் 4 சிக்சர் அடிக்க மீண்டும் ஆட்டம் புத்துயிர் பெற்றது.
இறுதியில் மே.தீ., அணி 20 ஓவர்க்கு 3 விக்கெட் மட்டுமே இழந்து 181 ரன் எடுத்திருந்தது.
மே.தீ., அணியில் பிராவோ 43 ரன்கள், நிக்கோலஸ் 25 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
182 ரன்கள் இலக்காக கொண்டு இந்திய அணி களமிறகியது. எப்பொழுதும் போல் ரோகித் மற்றும் தாவன் ஜோடியே தொடக்க ஆட்டகாரர்களாக இறங்கினார்.
சற்றும் எதிர்பாராத விதமாக ரோகித் 4 ரன்களில் வெளியேற அடுத்து இறங்கிய ராகுலும் 17 ரன்களில் வெளியேறினார்.
சற்றே சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு தவான் இறுதிவரை நம்பிக்கை கொடுத்தார்.
தவானுடன் ரிஷப் பந்த் கைக்கோர்த்து அணியை முன்னேற்றினார். இருவரும் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை மே.தீ., அணிக்கு பந்த் கொடுத்தார், அப்பொழுது அவர் 58 ரன் எடுத்திருந்தார்.
தாவனும் 62 பந்துகளில் 92 ரன் எடுத்து ஆட்டமிழக்க போட்டியில் விறு விறுப்பு கூடியது, அடுத்து இறங்கிய வீரர்கள் பொறுமையாக விளையாடி தங்கள் பொறுப்பை நிறைவேற்றி கடைசி பந்து வரை ஆட்டதில் விறு விறுப்பை சேர்த்தனர்.
இறுதியில் 4 விக்கெட் இழப்பீர்க்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மே.தீ. அணியை ஒயிட்வாஷ் செய்தது.