Womens Cricket : பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகின்றது.
இதில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றனர். பிரிவு ‘ பி ‘ – யில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து நேற்று இரவு இரண்டாம் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டது.
டாஸ் வென்று இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் தனது பேட்டிங்கை தொடாகியது பாக்., அணி.
ஆட்டத்தின் தொடக்கமே பாக்., அணிக்கு சரியாக அமையவில்லை என்றே கூற வேண்டும்.
ஆயிஷா மற்றும் சோகைல் இருவருமே ஒற்றை இலக்கு ரன் மட்டுமே எடுத்தனர். ஆனால் அடுத்ததாக களம் இறங்கிய பிஸ்மா மற்றும் நிதாதர் அரை சதம் அடிதனர்.
இதனால் ரன் அதிகரித்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பீர்க்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 19 ஓவர் முடிவில் 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி அடைந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஹேமலதா மற்றும் பூனம் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அதே சமயத்தில் மிதாலி ராஜ் 56 ரன்கள் , மந்தனா 26 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். மேலும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 14 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில்