மழை வெள்ள காலத்தில் களத்தில் இறங்கி வேலை பார்த்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Hight Court Wishes to Tamilnadu Government : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
கொரானா பேரிடர் காலம், வட கிழக்கு பருவ மழை, புயல் பாதிப்பு என அனைத்து பேரிடர்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்களை பாதுகாத்தனர்.
கடந்த முறை பெரும் வெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எடுத்து கொண்டதால் தான் இந்த ஆண்டு பெய்த பெரும் மழையில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு மழையின்போது நீர் நிலைகள் முழுமையாக நிரம்பிய போதும், ஏரிகள் திறப்பால், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு தி.மு.க சார்பில் ஆஜராஜன வழக்கறிஞர் குமரேசன் பாராட்டு தெரிவித்தார்.
ஸ்டாலின் எதிரான அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையின் போது தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த பாராட்டை தெரிவித்தது.