High Court Verdict on Theatre Opening in Tamilnadu

மாஸ்டர் ரிலீசுக்கு சிக்கல் ஏற்படும் வகையில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

High Court Verdict on Theatre Opening in Tamilnadu : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதி அளித்திருந்த நிலையில் விஜய் மற்றும் சிம்பு வைத்த கோரிக்கையால் இது 100% ஆக மாற்றப்பட்டது.

நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தால் நிச்சயம் மீண்டும் கொரானா பரவல் தீவிரமாகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர் ஒருவர் கூட தளபதி விஜய்க்கு கோரிக்கை வைத்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கும் வேலயில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியா?

பள்ளிகள் திறந்தால் கொரோனா பரவும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தால் கொரானா பரவாதா? என கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.