Hemnath Friend About Chithra Suicide

சித்ராவின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் ஹேமந்த் தான் என அவரது நண்பர் கூறியுள்ளார்.

Hemnath Friend About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் – ல் நடித்தவர் சித்ரா. இவர் கடந்த மாதம் தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக இவரது கணவர் ஹேமந்த் தான் தற்கொலைக்கு தூண்டியதாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என்று அவருடைய 10 வருட நண்பரான ரோகித் என்பவர் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

சித்ராவை சீரியலில் நடிக்கக்கூடாது என வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது இதற்கு சித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் சித்ராவின் கணவர் அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைகளையும் கொடுமையும் படுத்தியுள்ளார்.

இருப்பினும் சித்ரா தான் காதலித்து விட்ட காரணத்திற்காக பொறுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

தற்போது ஹேமந்த் ஜாமீன் கேட்டு உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என அவரது நண்பர் இந்த உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

இது சித்ராவின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.