Happy Birthday king Maker kamarajar :
சென்னை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்,
தமது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளார். அதன் திறப்பு விழா காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று நடைபெற்றது.
கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்களின் மணிமண்டபம் சுமார் ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான அதிமுக அறிக்கை வெளியானது..புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்!
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், காணொலி காட்சி மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.