Tamilnadu Government Clarification About GST Amount
Tamilnadu Government Clarification About GST Amount Issue : மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய GST நிலுவைத்தொகையை தொடர்ந்து நிலுவையில் வைத்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வந்து சேரவேண்டிய இந்தத் தொகை நிலையில் தான் உள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பது போல குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா? மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையானது, தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்திர பிரதேசம் ( 11,742 கோடி) , குஜராத் (11,562 கோடி), கர்நாடகம்( 13,763) போன்ற மாநிலங்களுக்கே மத்திய அரசு கொடுக்கவில்லை, மேலும் சிவ சேன ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அதிகபட்சமாக 22,485 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளது.
தமிழகதிற்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய GST நிலைவைத்தொகையானது 11,269 கோடி ரூபாயாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இத்தொகை குறைவு தான்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், 2020 ஆண்டு ஜூன் மாதம் 3,193 கோடி ரூபாயை தமிழகத்திற்கு செலுத்தியது மத்திய அரசு. கடந்து 3 ஆண்டுகளாக பல முறை பிரதமருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கடிதம் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது நடைபெற்ற கொரோனா பற்றிய காணொளி சந்திப்பின் போது கூட தமிழக முதல்வர் பிரதமரிடம் இந்த GST நிலைவைத் தொகையை தமிழகத்திற்கு அளிக்குமாறு கேட்காமல் இருந்ததில்லை.
செப்டம்பர் மாதம் 23 அன்று நடைபெற்ற GST தொடர்பான காணொளி கூட்டத்தின் போதும் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற மூத்த அமைச்சர் ஜெயக்குமார் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிலைவைத் தொகையான 4,321 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு கோரிக்கை வைத்தார்.
இவை அனைத்தையும் அறிந்துமே, GST விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.