தென்னிந்திய புகைப்பட கலைஞர்கள் சங்க டத்திற்கு ரூபாய் 20000 கொடுத்து உதவியுள்ளார் ஜி.பி கிருஷ்ணா.
GP Krishna Helps to SIMSCA : சீனாவில் தோன்றிய தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் தென் இந்திய திரைப்பட புகைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கு M/s.Muybridge film school.. Chennai/India என்ற பயிற்சி பள்ளியின் உரிமையாளர் ஜிபி கிருஷ்ணா அவர்கள் ரூபாய் 20000 நன்கொடை அளித்துள்ளார்.
அவரின் இந்த உதவிக்கு தென்னிந்திய திரைப்பட புகைபடங்கள் கலைஞர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.