Government Order on E-Pass
Government Order on E-Pass

சென்னையில் இருந்து வெளியே செல்ல இ பாஸ் அளிக்க கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Government Order on E-Pass : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் சென்னை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ பாஸ் வழங்க கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியே செல்ல இ பாஸ் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் சென்னையில் கொரோனாவில் இருந்து சோழிங்கநல்லூர் மண்டலம் முற்றிலுமாக மீண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.