Illegal affair
கள்ளக்காதல் விவாகரத்தில் புதுமணப்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl killed in illegal issue in chennai tirsulam – சென்னை திரிசூலத்தில் வசித்து வருபவர் அபின்ஷா. இவர் மனிஷா என்கிற பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தார். அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்தனர். அங்கு திருமணம் செய்யாமலயே அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதில், மனிஷா கர்ப்பமடைந்துள்ளார். எனவே, அவர்கள் இருவரையும் உறவினர் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

வீட்டை விட்டு வெளியே புறப்படுகையில் கால் இடறினால், அது அபசகுனமா? தெரிந்துகொள்வோமா!

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2 நாட்களுக்கு முன்பு மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தையை தொடர்பு கொண்டு அபின்ஷா தகவல் கூறியுள்ளார்.

ஆனால், இறுதி சடங்கிற்கு வந்த உறவினர்கள் மனிஷாவின் மரணத்தில் சந்தேகமடைந்தனர். எனவே, அபின்ஷாவின் செல்போனை அவர்கள் சோதனை செய்தனர். அதில், அவர் அனிதா என்கிற பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. எனவே, இந்த இந்த விவகாரம் அபின்ஷாவுக்கு தெரிய வந்ததால் தகராறு ஏற்பட்டு அவரை மனிஷாவை அவர் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அல்லது, அனிதாவை திருமணம் செய்வதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.